செய்திகள்
விவசாயி பலி

செங்கம் அருகே ஓடையை கடக்க முயன்ற விவசாயி நீரில் அடித்துச்செல்லப்பட்டு பலி

Published On 2021-11-02 12:26 GMT   |   Update On 2021-11-02 12:26 GMT
செங்கம் அருகே ஓடையை கடக்க முயன்ற விவசாயி நீரில் அடித்துச்செல்லப்பட்டு பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கம்:

செங்கத்தை அடுத்த செ.சொர்பனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 60), விவசாயி. இவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்துக்குச் செல்வதற்காக நேற்று கிராமம் அருகில் உள்ள ஒரு ஓடையை கடந்து செல்ல முயன்றார்.

மழையால் ஓடையில் அதிகளவில் தண்ணீர் ஓடியதால் தர்மலிங்கம் கடந்து செல்ல முடியாமல் எதிர்பாராதவிதமாக ஓடை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பாய்ச்சல் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, தர்மலிங்கத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News