செய்திகள்
கொரோனா தடுப்பூசி

சிறப்பு முகாமில் 44,299 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-10-31 15:37 IST   |   Update On 2021-10-31 15:37:00 IST
விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 11 லட்சத்து 2 ஆயிரத்து 321 பேருக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 5 லட்சத்து 16 ஆயிரத்து 22 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 978 இடங்களில் நடந்த 7-வது கொரோனா தடுப்பூசி முகாமில் 14,583 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 29,716 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 44, 299 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுவரை 11 லட்சத்து 2 ஆயிரத்து 321 பேருக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 5 லட்சத்து 16 ஆயிரத்து 22 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் ஆக மொத்தம் 16 லட்சத்து 18 ஆயிரத்து 343 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News