செய்திகள்
கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை செய்ய ஆர்வம் காட்டும் மாணவர்கள்

Published On 2021-10-29 13:59 IST   |   Update On 2021-10-29 13:59:00 IST
தனியார் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெறுவதற்காக பரிசோதனை செய்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கோத்தகிரி:

கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை வருகிற 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி கோத்தகிரி பகுதியில் மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு முன்பு 72 மணி நேரத்தில் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று தனியார் பள்ளிகள் தெரிவித்து உள்ளன. காலை 8.30 மணி முதல் மாலை 3.45 மணி வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக தனியார் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெறுவதற்காக பரிசோதனை செய்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களிடம் இருந்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

Similar News