செய்திகள்
கொரோனா வைரஸ்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

Published On 2021-10-27 17:01 IST   |   Update On 2021-10-27 17:01:00 IST
கடந்த வாரம் வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தது. ஆனால் இன்று 20 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனாலும் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இன்று வேலூர் மாவட்டத்தில் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மாநகராட்சி பகுதியில் 7 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் வேலூர் மாவட்டத்தில் பாதிப்பு குறைவாக இருந்தது. ஆனால் இன்று 20 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

குறிப்பாக ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்.

இதன்மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் உயிர் இழப்பை தடுக்கலாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News