செய்திகள்
வேலூரில் வாகனம் மோதி சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்
வேலூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயமடைந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்தவர் பூவேந்தன் (வயது 54). வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு பணிக்கு செல்வதற்காக சேண்பாக்கத்தில் இருந்து பைக்கில் சத்துவாச்சாரி வந்துகொண்டிருந்தார்.
புதிய பஸ் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் நிலைதடுமாறி பூவேந்தன் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்தவர் பூவேந்தன் (வயது 54). வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு பணிக்கு செல்வதற்காக சேண்பாக்கத்தில் இருந்து பைக்கில் சத்துவாச்சாரி வந்துகொண்டிருந்தார்.
புதிய பஸ் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் நிலைதடுமாறி பூவேந்தன் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.