செய்திகள்
கைது

கல்லூரி மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது

Published On 2021-10-27 07:01 GMT   |   Update On 2021-10-27 07:01 GMT
திருமணத்தை மறைத்து கல்லூரி மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி பகுதியை சேர்ந்தவர் 18 வயது மாணவி. இவர் அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் சதீஷ்குமார்(28). தொழிலாளி.

2 பேரும் அருகருகே வசித்து வருவதாலும், அடிக்கடி சந்தித்து கொண்டதாலும் இருவருக்கும் இடையே நட்பாக பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து செல்போன் எண்களையும் பரிமாறி கொண்டு பேசி வந்தனர். நட்பாக தொடங்கிய பழக்கம் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.

மேலும் சதீஷ்குமார் மாணவியை பல இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி மாணவியுடன் தனிமையில் நெருக்கமாக இருந்துள்ளார். பலமுறை இதனை சொல்லி, சொல்லி அவர் மாணவியுடன் உறவு வைத்துள்ளார்.

இந்த நிலையில் மாணவி கர்ப்பமானார். இதுகுறித்து தனது காதலனிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டதும் அதிர்ச்சியான அவர் அதன் பின்னர் மாணவியுடன் பேசுவதை தவிர்த்து விட்டார்.

மாணவி செல்போனில் தொடர்பு கொண்டாலும் சதீஷ்குமார் போனை எடுக்காமலும், மாணவியை சந்திப்பதையும் தவிர்த்து வந்தார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவி சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சதீஷ்குமார் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், அவரது மனைவி பிரசவத்திற்காக ஊருக்கு சென்றிருந்ததும் தெரியவந்தது. ஆனால் அவர் திருமணமானதையே மறைத்து மாணவியுடன் நெருங்கி பழகி கர்ப்பமாக்கியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சதீஷ்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News