செய்திகள்
செம்பனார்கோவில் அருகே தீயில் எரிந்து கூரை வீடு நாசம்
வீட்டில் இருந்த பீரோ, துணிமணிகள், பாத்திரங்கள், ரேஷன் கார்டு உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.
பொறையாறு:
செம்பனார்கோவில் அருகே பரசலூர் ஊராட்சி சாத்தனூர் வள்ளுவக்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 40). இவருடைய கூரை வீடு நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது ராஜகோபால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் வீட்டில் இருந்த பீரோ, துணிமணிகள், பாத்திரங்கள், ரேஷன் கார்டு உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.