செய்திகள்
ஆலங்குடி அருகே வாகனம் மோதி முதியவர் பலி
ஆலங்குடி அருகே வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி:
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா மேற்கு கண்ணத்தான்குடியை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 71). இவர், தனது சைக்கிளில் புதுக்கோட்டை தஞ்சாவூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். குப்புடையான்பட்டி பிரிவு சாலையில் வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் முதியவரின் சைக்கிள் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் முதியவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலியமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செம்பட்டி விடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.