செய்திகள்
நீரில் மூழ்கி பலி

அறந்தாங்கி அருகே நீரில் மூழ்கி வாலிபர் பலி

Published On 2021-10-16 14:27 GMT   |   Update On 2021-10-16 14:27 GMT
அறந்தாங்கி அருகே நீரில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகன் அஜித் (21). இவர் பஞ்சர் கடை வைத்து நடத்தி வந்தார்.

இந்நிலையில் இவர் தனது நண்பர்களுடன் பொற்க் குடையார் கோவில் அருகே உள்ள ஊற்றுக்குழி ஓரத்தில் மது அருந்தியுள்ளார். பிறகு ஊற்றுக்குழியில் குழித்துவிட்டு வருவதாகக் கூறிச் சென்ற அஜித் நீண்ட நேரமாகியும் வர வில்லை. அதனையடுத்து சந்தேகமடைந்த நண்பர்கள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரில் இறங்கி நீண்ட நேரமாக தேடி, அஜித்தை சடலமாக மீட்டனர். பின்பு உடல் பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News