செய்திகள்
ஊட்டி மலை ரெயில் சேவை

ஊட்டி மலை ரெயில் சேவை மீண்டும் ரத்து

Published On 2021-10-10 10:49 IST   |   Update On 2021-10-10 10:49:00 IST
மேட்டுப்பாளையம்-குன்னூர் பாதையில் பாறை விழுந்து தண்டவாளம் சேதம் அடைந்ததால், மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது.
ஊட்டி:

கொரோனா ஊரடங்கு காரணமாக ஊட்டி மலைரெயில் சேவை நிறுத்தப்பட்டது. ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்வை தொடர்ந்து கடந்த மாதம் 6-ந் தேதி முதல் மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் ஊட்டி-குன்னூர் இடையே 3 முறை, மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே ஒரு முறை இயக்கப்படுகிறது.

ஊட்டியில் இருந்து குன்னூருக்கு செல்ல முதல் வகுப்பு ரூ.350, 2-ம் வகுப்பு ரூ.150, மேட்டுப்பாளையத்துக்கு செல்ல முதல் வகுப்பு ரூ.600, 2-ம் வகுப்பு ரூ.295 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில் மேட்டுப்பாளையம்-குன்னூர் பாதையில் பாறை விழுந்து தண்டவாளம் சேதம் அடைந்ததால், மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது. அதன் பின்னர் சீரமைப்பு பணி முடிந்து நேற்று மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலைரெயில் இயக்கப்பட்டது. இதையொட்டி ஊட்டி ரெயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.



இந்நிலையில், இன்று கல்லார்-அடர்லி இடையே மண் சரிவு மீண்டும் ஏற்பட்டு தண்டவாளத்தில் விழுந்துள்ளது. இதனால் மேட்டுப்பாளையம்-ஊட்டி ரெயில் சேவை மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

2 நாட்களாக ரத்தாகிய மலைரெயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கிய நிலையில் இன்று மண் சரிவு காரணமாக ரெயில் சேவை மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Similar News