செய்திகள்
காட்பாடி அருகே விவசாய நிலத்தில் மின்வேலியில் சிக்கி கணவன், மனைவி பலி
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே விவசாய நிலத்தில் மின்வேலியில் சிக்கி கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள உள்ளி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 30) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி லெட்சுமி (26) இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடமாகிறது.
நேற்று இரவு ஜெயப்பிரகாஷ், லெட்சுமி இருவரும் அவர்களுக்கு சொந்தமான பசு மாட்டை ஓட்டி வருவதற்காக விவசாய நிலத்திற்கு சென்றனர். அங்கிருந்து மாட்டை வீட்டிற்கு ஓட்டி வந்தனர். வழியில் உள்ள விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிக்காக யாரோ மின்வேலி அமைத்துள்ளனர். அந்த மின்வேலியில் பசுமாடு மற்றும் ஜெயப்பிரகாஷ், லட்சுமி ஆகியோர் சிக்கினர்.
இதில் மின்சாரம் தாக்கியதில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். அவர்கள் ஓட்டிச்சென்ற பசு மாடு இறந்தது.
விவசாய நிலத்துக்கு சென்ற தம்பதி வீடு திரும்பாததால் இன்று காலையில் அவரது குடும்பத்தினர் விவசாய நிலத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு அவர்கள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்களின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான தம்பதியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விவசாய நிலத்தில் மின்வேலி வைத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள உள்ளி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 30) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி லெட்சுமி (26) இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடமாகிறது.
நேற்று இரவு ஜெயப்பிரகாஷ், லெட்சுமி இருவரும் அவர்களுக்கு சொந்தமான பசு மாட்டை ஓட்டி வருவதற்காக விவசாய நிலத்திற்கு சென்றனர். அங்கிருந்து மாட்டை வீட்டிற்கு ஓட்டி வந்தனர். வழியில் உள்ள விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிக்காக யாரோ மின்வேலி அமைத்துள்ளனர். அந்த மின்வேலியில் பசுமாடு மற்றும் ஜெயப்பிரகாஷ், லட்சுமி ஆகியோர் சிக்கினர்.
இதில் மின்சாரம் தாக்கியதில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். அவர்கள் ஓட்டிச்சென்ற பசு மாடு இறந்தது.
விவசாய நிலத்துக்கு சென்ற தம்பதி வீடு திரும்பாததால் இன்று காலையில் அவரது குடும்பத்தினர் விவசாய நிலத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு அவர்கள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்களின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான தம்பதியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விவசாய நிலத்தில் மின்வேலி வைத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.