செய்திகள்
டாஸ்மாக் கடையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Published On 2021-10-01 13:21 GMT   |   Update On 2021-10-01 13:21 GMT
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற அறிவுறுத்தினார்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் வெள்ளகுளத்தெரு பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடை அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளித்தனர்.

இதில் இந்த டாஸ்மாக் கடையை சுற்றிலும் குடியிருப்புகள் இல்லை என டாஸ்மாக் மேலாளர் பதில் அளித்ததால், இது குறித்தும் மாவட்ட கலெக்டருக்கு அந்த பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற அறிவுறுத்தினார்.

டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யும் நிலை உருவானதால் கடைக்கு மது குடிக்க வருபவர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் கடையின் முன்பு பீர் பாட்டிலுடன் கடையை மாத்தாதீங்க என கோரிக்கை முழக்கம் எழுப்பி கடையின் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சிவகாஞ்சி போலீசார் விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தி இது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News