செய்திகள்
கைது

லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

Published On 2021-09-29 06:33 GMT   |   Update On 2021-09-29 06:33 GMT
லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:

ஈரோடு பழைய பூந்துறைரோடு பகுதியில் டவுன் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் ஈரோடு நாவலடியார் வீதியை சேர்ந்த நாசர் (வயது 56) என்பதும், அவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நாசரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 11 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் ஈரோடு முள்ளாம்பரப்பு பகுதியில் தாலுகா போலீசார் ரோந்து சென்றார்கள். அங்கு லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக ஈரோடு வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்த எத்திராஜ் (49) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 16 லாட்டரி சீட்டுகள், ஒரு மொபட், ரூ.550 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News