செய்திகள்
கோபிசெட்டிபாளையம் அருகே மின்சாரம் தாக்கி மாணவி பலி
கோபிசெட்டிபாளையம் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி பலியான சம்பவம் தொடர்பாக நம்பியூர் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் எரிக்காட்டுப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வடிவு. இவர்களுக்கு பானுமதி (13) என்ற மகளும், உதயகுமார் (12) என்ற மகனும் உள்ளனர்.
பானுமதி நஞ்சைப் புளியம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை 6.30 மணியளவில் தனது வீட்டின் குளியல் அறைக்கு மாணவி பானுமதி சென்றார்.
அப்போது அங்கிருந்த மின் வயர் மூலம் குளியல் அறையின் இரும்பு கதவில் மின் கசிவு ஏற்பட்டு இருந்தது. இதை கவனிக்காத மாணவி பானுமதி இரும்பு கதவை தொட்டபோது மின்சாரம் தாக்கி தூக்கி விசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
குளிக்க சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது தாய் தனது மகனை அழைத்து அக்காவை வரச்சொல் என்றார். இதையடுத்து அவரது மகன் உதயகுமார் குளியல் அறையின் கதவை தட்டினார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது.
இதையடுத்து அவர் தனது பெற்றோரிடம் மின்சாரம் பாய்ந்து இருப்பதாக தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை முருகன் மின் இணைப்பை துண்டித்துவிட்டு குளியல் அறைக்குள் சென்று பார்த்தார். அப்போது பானுமதி மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறிந்து நம்பியூர் இன்ஸ்பெக்டர் தங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் எரிக்காட்டுப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வடிவு. இவர்களுக்கு பானுமதி (13) என்ற மகளும், உதயகுமார் (12) என்ற மகனும் உள்ளனர்.
பானுமதி நஞ்சைப் புளியம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை 6.30 மணியளவில் தனது வீட்டின் குளியல் அறைக்கு மாணவி பானுமதி சென்றார்.
அப்போது அங்கிருந்த மின் வயர் மூலம் குளியல் அறையின் இரும்பு கதவில் மின் கசிவு ஏற்பட்டு இருந்தது. இதை கவனிக்காத மாணவி பானுமதி இரும்பு கதவை தொட்டபோது மின்சாரம் தாக்கி தூக்கி விசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
குளிக்க சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது தாய் தனது மகனை அழைத்து அக்காவை வரச்சொல் என்றார். இதையடுத்து அவரது மகன் உதயகுமார் குளியல் அறையின் கதவை தட்டினார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது.
இதையடுத்து அவர் தனது பெற்றோரிடம் மின்சாரம் பாய்ந்து இருப்பதாக தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை முருகன் மின் இணைப்பை துண்டித்துவிட்டு குளியல் அறைக்குள் சென்று பார்த்தார். அப்போது பானுமதி மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறிந்து நம்பியூர் இன்ஸ்பெக்டர் தங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.