செய்திகள்
சேத்துப்பட்டு அருகே மணல் கடத்தியவர் கைது
சேத்துப்பட்டு அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் வரதராஜ், முருகன் மற்றும் போலீசார் ஆரணி சாலையில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது விண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் நாகராஜன் (வயது 40) என்பவர் லாரியில் விண்ணமங்கலம் கிராமம் அருகே செய்யாறு படுகையில் இருந்து மணல் கடத்தி கொண்டு வேகமாக வந்தார். லாரியை மடக்கி போலீசார் பறிமுதல் செய்தனர். மணல் கடத்தலில் ஈடுபட்ட நாகராஜை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.