செய்திகள்
திருவண்ணாமலை அருகே ஆசிரியர் வீட்டில் திருடியவர் கைது
திருவண்ணாமலை அருகே ஆசிரியர் வீட்டில் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடிஅண்ணாமலை கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 41), ஆசிரியர். சம்பவத்தன்று இரவு இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் மடிக்கணினி, ரூ.72 ஆயிரம், வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடிச் சென்று உள்ளார்.
இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், திருவண்ணாமலை ஆடையூரை சேர்ந்த சிம்புராஜ் (19) என்பவர் ஆசிரியர் வீட்டில் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.