செய்திகள்
திருட்டு

சேத்துப்பட்டில் ஆசிரியை வீட்டில் நகை, பணம் திருட்டு

Published On 2021-09-16 08:19 GMT   |   Update On 2021-09-16 08:19 GMT
சேத்துப்பட்டில் ஆசிரியை வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டு:

சேத்துப்பட்டு ஆசிரியர்நகர் பகுதியில் வசிப்பவர் அருள்மேரி வசந்தி (வயது 47). இவர், சேத்துப்பட்டில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு பணிக்குச் சென்று விட்டார்.

மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது, உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.90 ஆயிரம், 20 பவுன் நகையை காணவில்லை. பட்டப்பகலில் யாரோ நகை, பணத்தைத் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து ஆசிரியை அருள்மேரி வசந்தி சேத்துப்பட்டு போலீசில் புகார் செய்தா்ா. துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன், இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் வரதராஜன், முருகன் மற்றும் போலீசார் ஆசிரியை வீட்டுக்கு சென்று விசாரித்தனர். திருவண்ணாமலையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகையை பதிவு செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News