செய்திகள்
விபத்து

கீழ்பென்னாத்தூர் அருகே பைக் விபத்தில் புது மாப்பிள்ளை பலி

Published On 2021-08-31 11:31 GMT   |   Update On 2021-08-31 11:31 GMT
கீழ்பென்னாத்தூர் அருகே திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற போது இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் புது மாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.
கீழ்பென்னாத்தூர்:

கீழ்பென்னாத்தூர் அடுத்த கழிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் (66), இவரது மகன் விக்னேஷ் (27) கட்டிட தொழிலாளி. விக்னேஷுக்கு வரும் 9-ந் தேதி திருமண நடத்திட ஏற்பாடு நடந்து வந்தது.

திருமண பத்திரிக்கைகள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கி வந்தனர்.

நேற்றிரவு 8 மணி அளவில் விக்னேஷ், பக்கத்து கிராமமான கனபாபுரத்தில் உள்ள தனது உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் வழங்குவதற்காக பைக்கில் சென்றார். அப்போது கனபாபுரம் சுங்கா நகர் அருகே வந்தபோது, வழுதலங்குணம் கிராமத்தில் இருந்து வந்து இருசக்கர வாகனத்தில் உதயா (20) என்பவர் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக, 2 பைக்கும் நேருக்கு நேர் மோதிகொண்டன.

இதில் விக்னேசும், உதயாவும் படுகாயம் அடைந்தனர். விக்னேஷூக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் விக்னேஷை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக கீழ்பென்னாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News