செய்திகள்
கண்ணமங்கலம் பகுதியில் தடுப்பூசி போடாத கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
கண்ணமங்கலம் பகுதியில் உள்ள கடைகளில் ஆரணி தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் கணபதி, கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் பகுதியில் உள்ள கடைகளில் ஆரணி தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் கணபதி, கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தடுப்பூசி போடாத 6 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தனர். மேலும் சுகாதார ஆய்வாளர் வேலாயுதம், சுகாதார செவிலியர்கள் அடங்கிய குழுவினர் ஓட்டல்கள், ஜவுளி கடைகள் உள்பட பல்வேறு கடைக்காரர்கள் மற்றும் அதில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்டனர்.