செய்திகள்
கொரோனா தடுப்பூசி

பெரணமல்லூரில் 122 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது

Published On 2021-08-29 18:07 IST   |   Update On 2021-08-29 18:07:00 IST
பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உள்பட 122 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
சேத்துப்பட்டு:

பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடந்தது. முகாமை பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் இந்திரா இளங்கோவன் தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரணிதரன், ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உள்பட 122 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

முகாமில் சுகாதார மேற்பார்வையாளர் அன்பரசன், சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News