செய்திகள்
தூசி அருகே பாம்பு கடித்து தொழிலாளி உயிரிழப்பு
தூசி அருகே பாம்பு கடித்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூசி:
தூசி அருகே உள்ள அரசாணைபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 55), தொழிலாளி. இவரை பாம்பு கடித்துள்ளது.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராதாகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூசி அருகே உள்ள அரசாணைபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 55), தொழிலாளி. இவரை பாம்பு கடித்துள்ளது.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராதாகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.