செய்திகள்
ஆரணியில் தடுப்பூசி போடாதவர்களின் 6 கடைகளுக்கு ‘சீல்’
ஆரணியில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள் வேலைபார்த்த 6 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ், சுகாதார இணை இயக்குனர் டாக்டர் கண்ணகி ஆகியோர் உத்தரவின்படி ஆரணி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) டி. ராஜவிஜயகாமராஜ் தலைமையில் கடை கடையாக கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் யார் யார் என்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள் வேலைபார்த்த 6 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
நகராட்சி வருவாய் ஆய்வாளர் மோகன், கட்டிட ஆய்வாளர் பாலாஜி, சுகாதார ஆய்வாளர் குமரவேல் மற்றும் காவல்துறையினர் சுகாதாரத்துறையினர் உடன் சென்றிருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ், சுகாதார இணை இயக்குனர் டாக்டர் கண்ணகி ஆகியோர் உத்தரவின்படி ஆரணி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) டி. ராஜவிஜயகாமராஜ் தலைமையில் கடை கடையாக கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் யார் யார் என்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள் வேலைபார்த்த 6 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
நகராட்சி வருவாய் ஆய்வாளர் மோகன், கட்டிட ஆய்வாளர் பாலாஜி, சுகாதார ஆய்வாளர் குமரவேல் மற்றும் காவல்துறையினர் சுகாதாரத்துறையினர் உடன் சென்றிருந்தனர்.