செய்திகள்
கைது

குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் கைது

Published On 2021-08-22 17:47 IST   |   Update On 2021-08-22 17:47:00 IST
குற்ற வழக்குகளில் தொடர்புடையவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் அறிவுறுத்தியதிற்கிணங்க காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவரான காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தை அடுத்த நேரு நகரை சேர்ந்த துரைபாபு (30) தலைமறைவாக இருந்துகொண்டு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

Similar News