செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 37 பேருக்கு கொரோனா
திருவண்ணாமலை மாவட்டத்தில் 52 ஆயிரத்து 938 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 37 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுவரை மாவட்டத்தில் 52 ஆயிரத்து 938 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 51 ஆயிரத்து 820 பேர் குணமடைந்து உள்ளனர். 472 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 646 பேர் உயிரிழந்து உள்ளனர்.