செய்திகள்
கோப்புப்படம்

95 சதவீதம் கொரோனா தடுப்பூசி போட்ட கிராம மக்கள்- வட்டார வளர்ச்சி அலுவலர் பாராட்டு

Published On 2021-08-15 16:21 IST   |   Update On 2021-08-15 16:21:00 IST
திருவண்ணாமலை அடுத்த அத்தியந்தல் ஊராட்சியில் இதுவரை 95 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலையை அடுத்த அத்தியந்தல் ஊராட்சியில் 11-வது முறையாக நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அத்தியந்தல் ஊராட்சியில் இதுவரை 95சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அத்தியந்தல் ஊராட்சியில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனை புதிதாக பொறுப்பேற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அருணாசலம் பார்வையிடுவதற்காக அத்தியந்தல் ஊராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவரை ஊராட்சி மன்றத் தலைவர் இரா.முருகன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

பின்னர் கால்வாய் அமைக்கும் இடத்துக்கு நேரில் சென்று வட்டார வளர்ச்சி அலுவலர் அருணாசலம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அத்தியந்தல் பகுதியில் சிறப்பாக திட்டப்பணிகள் நடைபெற்று வருவதற்கு பாராட்டு தெரிவித்தார்.

Similar News