செய்திகள்
களம்பூர் அருகே மணல் கடத்திய டிராக்டர், மாட்டு வண்டி பறிமுதல்
மணல் கடத்திய டிராக்டர், மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
ஆரணி அடுத்த களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விநாயகம், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். ஆரணி அடுத்த நடுக்குப்பம் பகுதியில் சென்றபோது அந்தவழுியாக டிராக்டரில் மணல் கடத்தி வந்த நபர் டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். அதேபோன்று காமக்கூர் ஆற்றுப்படுகைப் பகுதியில் இருந்து காமக்கூரை சேர்ந்த சேட்டு என்பவர் மாட்டு வண்டியில் மணல் எடுத்து வந்தார். அவரும் போலீசாரை பார்த்ததும் மாட்டுவண்டியை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.
அதைத்தொடர்ந்து போலீசார் டிராக்டர், மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி அடுத்த களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விநாயகம், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். ஆரணி அடுத்த நடுக்குப்பம் பகுதியில் சென்றபோது அந்தவழுியாக டிராக்டரில் மணல் கடத்தி வந்த நபர் டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். அதேபோன்று காமக்கூர் ஆற்றுப்படுகைப் பகுதியில் இருந்து காமக்கூரை சேர்ந்த சேட்டு என்பவர் மாட்டு வண்டியில் மணல் எடுத்து வந்தார். அவரும் போலீசாரை பார்த்ததும் மாட்டுவண்டியை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.
அதைத்தொடர்ந்து போலீசார் டிராக்டர், மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.