செய்திகள்
அனைத்து மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்
மின்சார சட்டத்திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தி மயிலாடுதுறையில் அனைத்து மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்சார சட்ட திருத்த மசோதா 2021-ஐ கைவிட வலியுறுத்தி அனைத்து மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பொறியாளர் சங்க பொறுப்பாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் சரவணகுமார், கலைச்செல்வன், முரளிதாஸ், பாரதி, பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மின்சார சட்ட திருத்த மசோதா 2021-ஐ மத்திய அரசு உடனே கைவிட வேண்டும், மின்சார துறையை தனியார் மயமாக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி., தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் சம்மேளனம் உள்ளிட்ட அனைத்து மின் வாரிய சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொறியாளர் சங்க நிர்வாகி அசோக்குமார் நன்றி கூறினார்.