செய்திகள்
கைது

மணல்மேடு அருகே அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளிவந்தவர் கைது

Published On 2021-08-09 20:33 IST   |   Update On 2021-08-09 20:33:00 IST
மணல்மேடு அருகே அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளிவந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணல்மேடு:

மணல்மேடு அருகே பட்டவர்த்தி பகுதியில் வாகன சோதனையில் மணல்மேடு போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது நான்கு மூட்டைகளில் அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் மணல் அள்ளி வந்த இளந்தோப்பு மெயின் ரோட்டை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (வயது 42) என்பவரை கைது செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிள் மற்றும் மணல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News