செய்திகள்
மயிலாடுதுறையில் பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2021-08-07 19:42 IST   |   Update On 2021-08-07 19:42:00 IST
மின்வாரிய செயற்பொறியாளர் மீது பாலியல் குற்றம் சாட்டிய பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க மகளிர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க பொறுப்பாளரும் மின்வாரிய உதவி கணக்கு அலுவலருமான விஜயலட்சுமி தலைமை தாங்கினார். கணக்கீட்டு மேற்பார்வையாளர் சுதா, இளமின் பொறியாளர் கீதா, கணக்கீட்டாளர் துர்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் முத்துக்குமரன் மீது அவதூறாக பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மின்வாரிய பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த பெண்ணுக்கு துணை போகும் ஊழியர்கள் மற்றும் சங்கத்தை சேர்ந்த ஒரு சிலரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த பிரீத்தி சரவணகுமார், வணிக ஆய்வாளர்கள் தமிழ்ச்செல்வி, தீபா, வருவாய் மேற்பார்வையாளர் ஜான்சிராணி, துப்புரவு பணியாளர் விக்னேஷ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News