செய்திகள்
போளூர் அருகே வேனில் மணல் கடத்தியவர் கைது
போளூர் அருகே வேனில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர்:
போளூர் அருகே அல்லியாளமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 46). இவர் நேற்று முன்தினம் இரவு கரைப்பூண்டி செய்யாற்றில் இருந்து வேனில் மணல் கடத்தி வந்தார்.
வெண்மணி அருகே சென்ற போது, ரோந்து பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் வேனை மடக்கி பிடித்தனர். பின்னர் வெங்கடேசனை கைது செய்து வேனை பறிமுதல் செய்தனர்.