செய்திகள்
கோப்புபடம்

செங்கம் அருகே பஸ் மினிவேன் மோதல் - ஒருவர் பலி

Published On 2021-07-10 21:05 IST   |   Update On 2021-07-10 21:05:00 IST
செங்கம் அருகே பஸ்- மினிவேன் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 17 பேர் காயம் அடைந்தனர்.
செங்கம்:

பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. செங்கம் அருகே வந்தபோது திருக்கோவிலூரில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற மினி வேனும், பஸ்சும் மோதிக் கொண்டது.

இதில் அரசு பஸ்சில் பயணம் செய்த ஒரு பெண்ணும், மினி வேனில் வந்த 17 நபர்களும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மேல்செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 5 பேரை செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர்கள் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 13 பேர் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 48) என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும் போலீசார் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News