செய்திகள்
மழை

செங்கம், திருவண்ணாமலையில் மழை

Published On 2021-07-10 15:22 IST   |   Update On 2021-07-10 15:22:00 IST
திருவண்ணாமலையில் நேற்று பகலில் வழக்கம் போல் வெயில் கொளுத்தியது. மாலையில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
செங்கம்:

செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு முழுவதும் மழை பெய்தது. நேற்று அதிகாலை வரையிலும் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று மாலையும் மீண்டும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருவண்ணாமலையில் நேற்று பகலில் வழக்கம் போல் வெயில் கொளுத்தியது. மாலையில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 7 மணியளவில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் நடந்து மற்றும் வாகனங்களில் சென்ற பொதுமக்கள் சாலையோரம் மறைவான பகுதியில் ஒதுங்கி நின்றனர். மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. பின்னர் லேசான சாரல் மழையாக பெய்தது.

Similar News