செய்திகள்
தற்கொலை

காட்பாடியில் ரெயில் முன் பாய்ந்து என்ஜினீயர் தற்கொலை

Published On 2021-07-06 15:43 IST   |   Update On 2021-07-06 15:43:00 IST
தாய் மற்றும் பாட்டி இறந்த விரக்தியில் என்ஜினீயர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
ஜோலார்பேட்டை:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் ஜெகன் (வயது 23). என்ஜினீயரிங் படித்துவிட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ராணிப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இவரது தாயார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மேலும் தனது பாட்டி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ஓட்டலில் தினசரி சாப்பிட்டு வந்த அவர் மன வேதனையில் காணப்பட்டார்.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று முன்தினம் இரவு ஜெகன் காட்பாடி ரெயில் நிலையம் அருகே ஆலப்புழையில் இருந்து தன்பாத் நோக்கி சென்ற ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு சென்று ஜெகன் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News