செய்திகள்
தற்கொலை

பண்ருட்டியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை

Published On 2021-07-06 15:26 IST   |   Update On 2021-07-06 15:26:00 IST
பண்ருட்டியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண்ருட்டி:

பண்ருட்டி அருகே எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுமதி(வயது35). கணவனை இழந்தவர். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது கணவரின் தம்பி மனைவி சித்ரா. அதேபகுதியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு வீடு பிரச்சினை சம்பந்தமாக. தகராறு இருந்து வந்தது. இந்த தகராறில் சுமதி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.  இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் விசாரிக்கிறார்.

Similar News