செய்திகள்
புதுச்சத்திரத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
புதுச்சத்திரத்தில் கஞ்சா விற்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சிதம்பரம்:
புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர், அப்போது ஆலப்பாக்கம் ரெயில்வே கேட் அருகே, சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் கீழ் பூவாணிக்குப்பத்தை சேர்ந்த சேகர் மகன் தமிழ்ச்செல்வன்(வயது 27), கம்பளிமேடு கிராமத்தை சேர்ந்த சந்திரன் மகன் அன்பரசு(26) ஆகியோர் என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து தமிழ்செல்வன், அன்பரசு ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர், அப்போது ஆலப்பாக்கம் ரெயில்வே கேட் அருகே, சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் கீழ் பூவாணிக்குப்பத்தை சேர்ந்த சேகர் மகன் தமிழ்ச்செல்வன்(வயது 27), கம்பளிமேடு கிராமத்தை சேர்ந்த சந்திரன் மகன் அன்பரசு(26) ஆகியோர் என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து தமிழ்செல்வன், அன்பரசு ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.