செய்திகள்
விபத்து பலி

மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

Published On 2021-07-05 15:29 IST   |   Update On 2021-07-05 15:29:00 IST
மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குத்தாலம்:

மயிலாடுதுறை அருகே மல்லியம் செட்டித்தெருவை சேர்ந்தவர் மதியழகன் இவரது மகன் மணிகண்டன் (வயது 26). இவர் மோட்டார் சைக்கிளில் உறவினர் திருமணத்திற்கு சென்றுவிட்டு நேற்று அதிகாலை மல்லியத்துக்கு திரும்பியுள்ளார். மூவலூர் மெயின்ரோட்டில் வந்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென சாலையோரம் இருந்த குப்பை தொட்டியில் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த மணிகண்டன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது தாய் நிர்மலா அளித்த புகாரின்பேரில் குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News