செய்திகள்
சீர்காழியில் கொரோனா தடுப்பூசி முகாம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருப்புங்கூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருப்புங்கூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மாலினி முருகன் தலைமை தாங்கினார். தடுப்பூசி முகாமை வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் காத்து நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்த முகாமில் ஊராட்சி மன்ற துணை தலைவர் ரமேஷ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட சபாநாயகம் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறையினர், நகராட்சி பணியாளர்கள் செய்திருந்தனர்.