செய்திகள்
கொரோனா தடுப்பூசி

நீலகிரி மாவட்டத்தில் கிராமங்களில் 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

Published On 2021-07-03 11:27 GMT   |   Update On 2021-07-03 11:27 GMT
நகர்புறம் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு தொற்று பரவுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. எனினும் கடந்த 3 நாட்களாக தடுப்பூசி இருப்பு இல்லாததால், யாரும் செலுத்தப்படவில்லை. அதன்பின்னர் கூடுதலாக கோவிஷீல்டு தடுப்பூசி வந்ததை தொடர்ந்து கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாயக்கூடங்கள், அங்கன்வாடி மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

முதல் மற்றும் 2-வது டோஸ் செலுத்த பொதுமக்கள் ஆர்வமுடன் மையங்களுக்கு சென்று செலுத்தினர். அவர்களது விவரங்கள் இணையதளத்தில் பதிவு செய்து தடுப்பூசி போடப்பட்டது. நகர்புறம் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு தொற்று பரவுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அங்கு 35 மையங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Tags:    

Similar News