செய்திகள்
தற்கொலை

சேத்துப்பட்டு அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-07-02 17:35 IST   |   Update On 2021-07-02 17:35:00 IST
சேத்துப்பட்டு அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டு:

சேத்துப்பட்டை அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 48), விவசாயி. இவர் உடல் நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவர் வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News