செய்திகள்
மாயம்

சீர்காழி அருகே 2 இளம்பெண்கள் மாயம்- போலீசார் விசாரணை

Published On 2021-07-01 15:18 IST   |   Update On 2021-07-01 15:18:00 IST
சீர்காழி அருகே 2 இளம்பெண்கள் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்காழி:

சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் சரகம் ஆதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சிவஷீலா (வயது 18) திருமணமானவர். மணல்மேடு நடராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சாருமதி (19) கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் சாருமதி ஆதமங்கலத்தில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு கடந்த 29ஆம் தேதி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு சாருமதி தனது தாத்தாவின் மோட்டார் சைக்கிளை வாங்கிகொண்டு சீர்காழி வரை சென்று வருவதாக கூறி புறப்பட்டுள்ளார். அப்போது அவருடன் சிவஷீலாவும் சென்றதாக தெரிகிறது.

ஆனால் இருவரும் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிவ ஷீலாவின் தாய் பொன்னாச்சி வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 2 இளம் பெண்களையும் தேடி வருகின்றனர். இதற்கிடையே சாருமதி எடுத்து சென்ற மோட்டார் சைக்கிள் வைத்தீஸ்வரன் கோயில் ரெயில் நிலையம் அருகே இருந்ததை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Similar News