செய்திகள்
விதிமுறையை மீறி செயல்பட்ட துணிக்கடைக்கு அதிகாரிகள் அபராதம் விதித்த போது எடுத்த படம்.

கூடலூரில் விதிகளை மீறி திறந்த துணிக்கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

Published On 2021-06-30 17:51 GMT   |   Update On 2021-06-30 17:51 GMT
கூடலூரில் விதிகளை மீறி திறந்திருந்த துணிக்கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
கூடலூர்:

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்பட 11 மாவட்டங்களில் டீக்கடைகள், சலூன் உள்ளிட்ட கடைகளைத் திறக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் துணிக்கடைகள் உள்ளிட்ட சில நிறுவனங்கள் திறக்க இன்னும் தளர்வுகள் அளிக்கவில்லை. இந்த நிலையில் கூடலூர் நகரில் விதிமுறைகளை மீறி துணிக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

தொடர்ந்து ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து கூடலூர் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், கொரோனா தடுப்பு பறக்கும் படை அலுவலர் சிவக்குமார், நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் நகர பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது தடையை மீறி 2 துணிக்கடைகள் செயல்படுவதை கண்டனர். இதைத்தொடர்ந்து அந்த கடை உரிமையாளருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து பயணிகளை ஏற்றிவந்த 20-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
Tags:    

Similar News