செய்திகள்
கைது

காரைக்குடி அருகே பெயிண்டரை தாக்கி பணம் பறித்தவர் கைது

Published On 2021-06-27 20:03 IST   |   Update On 2021-06-27 20:03:00 IST
காரைக்குடி அருகே பெயிண்டரை தாக்கி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:

காரைக்குடி ராமகிருஷ்ணா தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 42). பெயிண்டர். சம்பவத்தன்று பழனி சந்தைப்பேட்டை அருகே சென்ற போது அவரை வழிமறித்த வாலிபர் பழனியிடம் பணத்தை பறிக்க முயன்றுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு உருவாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. உடனே வழிப்பறி செய்ய முயன்ற வாலிபர் பழனியை உருட்டைக்கட்டையால் சரமாரியாக தாக்கி அவரது சட்டை பையில் இருந்த ரூ,.1000-ஐ பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து பழனி காரைக்குடி தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் பழனியை தாக்கி வழிப்பறி செய்த கணேசபுரத்தை சேர்ந்த விக்னேஷ் (21) என்பவரை கைது செய்தனர்.

Similar News