செய்திகள்
கொரோனாவுக்கு பெண்கள் உள்பட 3 பேர் பலி
அரியலூர் - பெரம்பலூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 100 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 37 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குன்னம் தாலுகா காடூரை சேர்ந்த 60 வயதுடைய மூதாட்டியும், பரவாயை சேர்ந்த 50 வயதுடைய பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193 ஆக உயர்ந்தது. நேற்று மட்டும் 44 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 252 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 842 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியவுள்ளது. மாவட்டத்தில் நேற்று 4,850 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 1,270 கோவிஷீல்டு தடுப்பூசியும், 2,240 கோவாக்சின் தடுப்பூசியும் கையிருப்பில் உள்ளது.
இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று 63 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 39 வயதுடைய ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று 36 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 593 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 806 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியவுள்ளது. மாவட்டத்தில் நேற்று 2,916 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.