செய்திகள்
போளூர் அருகே கஞ்சா, சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
போளூர் அல்லிநகரை சேர்ந்த செல்வி என்பவர் சாராயம், கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
போளூர்:
திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டிக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் தலைமையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சத்தியாநந்தன் மற்றும் தனிப்படை போலீசார் போளூர் மாட்டுப்பட்டி தெருவில் சீனுவாசன் (வயது 47) என்பவரின் வீட்டில் திடீர் சோதனை செய்தனர்.
அங்கு, 2¼ கிலோ கஞ்சாவை மறைத்து வைத்து விற்றது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சீனுவாசனை கைது செய்து போளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர் 15 நாள் காவலில் வைக்கப்பட்டார்.
மேலும் தனிப்படை போலீசார் போளூரை அடுத்த வசூர் கிராமத்துக்கு அருகில் உள்ள கல்குவாரி அருகே சோதனைச் செய்தனர். அங்கு, போளூர் அல்லிநகரை சேர்ந்த செல்வி (34) என்பவர் சாராயம், கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரின் வீட்டில் சோதனை செய்தபோது, அங்கு மறைத்து வைத்திருந்த 1¼ கிலோ கஞ்சா, 30 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவரை திருவண்ணாமலை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி, 15 நாள் காவலில் வைத்தனர்.
திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டிக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் தலைமையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சத்தியாநந்தன் மற்றும் தனிப்படை போலீசார் போளூர் மாட்டுப்பட்டி தெருவில் சீனுவாசன் (வயது 47) என்பவரின் வீட்டில் திடீர் சோதனை செய்தனர்.
அங்கு, 2¼ கிலோ கஞ்சாவை மறைத்து வைத்து விற்றது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சீனுவாசனை கைது செய்து போளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர் 15 நாள் காவலில் வைக்கப்பட்டார்.
மேலும் தனிப்படை போலீசார் போளூரை அடுத்த வசூர் கிராமத்துக்கு அருகில் உள்ள கல்குவாரி அருகே சோதனைச் செய்தனர். அங்கு, போளூர் அல்லிநகரை சேர்ந்த செல்வி (34) என்பவர் சாராயம், கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரின் வீட்டில் சோதனை செய்தபோது, அங்கு மறைத்து வைத்திருந்த 1¼ கிலோ கஞ்சா, 30 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவரை திருவண்ணாமலை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி, 15 நாள் காவலில் வைத்தனர்.