செய்திகள்
கைது

சேத்துப்பட்டு, போளூரில் மதுவிற்ற 7 பேர் கைது

Published On 2021-06-23 14:33 GMT   |   Update On 2021-06-23 14:33 GMT
சேத்துப்பட்டு, போளூரில் மதுவிற்ற 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டு:

சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மாறன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குப்பம் கிராமத்தை சேர்ந்த காசி (வயது 60), நெடுங்குணம் சந்திரசேகர் (50), கங்காபுரம் சின்னராஜ் (48), சேகர் (65), கொளக்கரைவாடி முனுசாமி (70) ஆகிய 5 பேர் மதுவிற்றதாக போலீசார் கைது செய்தனர்.

இதேபோல போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தரணி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெலாசூர், போளூரில் மதுவிற்ற இளையான் (67), ஆறுமுகம் (50) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
Tags:    

Similar News