செய்திகள்
மரணம்

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி

Published On 2021-06-22 11:46 GMT   |   Update On 2021-06-22 11:46 GMT
கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயதுடைய மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்தது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 37 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயதுடைய மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்தது. நேற்று மட்டும் 84 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 307 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 1,006 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியவுள்ளது. மாவட்டத்தில் நேற்றும் கோவாக்சின் தடுப்பூசி இல்லாததால், கோவிஷீல்டு தடுப்பூசி 4,653 பேருக்கு போடப்பட்டது. இதனால் கோவாக்சின் 2-வது டோஸ் போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மாவட்டத்தில் இதுவரைக்கு மொத்தம் 85,581 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 920 கோவிஷீல்டு தடுப்பூசி மட்டும் கையிருப்பில் உள்ளது. ஆனால் கோவாக்சின் தடுப்பூசி கையிருப்பில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News