செய்திகள்
வேதாரண்யம் அருகே விபத்தில் மூதாட்டி பலி
வேதாரண்யம் அருகே விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட்ட ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் யசோதா (வயது 65). தன் மருமகன் நாராயணனுடன் யசோதா மோட்டார் சைக்கிளில் அமர்ந்து சென்றபோது தோப்புத்துறை சாலையில் தவறி கீழே விழுந்து காயமடைந்தார். அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வவரும்போது இறந்தார். புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் சுப்ரியா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.