செய்திகள்
கைது

நாகையில் கஞ்சா வைத்திருந்தவர் கைது

Published On 2021-06-19 17:14 GMT   |   Update On 2021-06-19 17:14 GMT
நாகையில் கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:

நாகை வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தெற்கு நல்லியான் தோட்டத்தில் சந்தேகம்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தியாகராஜபுரத்தை சேர்ந்த ரவி (வயது 44) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News