செய்திகள்
பாரூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
பாரூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
பாரூர் போலீசார் சாந்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய சாந்தனூர் சிவலிங்கம் (வயது 35), ஒடச்சகரை சக்திவேல் (39), சிவலிங்கம் (40), கைலாசம் (38) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.400 பறிமுதல் செய்யப்பட்டது.