செய்திகள்
கடலூரில் அடுத்தடுத்து சம்பவம் - ஓடும் ஆம்புலன்சில் 2 பெண்களுக்கு பிரசவம்
கடலூரில் அடுத்தடுத்து 2 பெண்களுக்கு ஓடும் ஆம்புலன்சில் பிரசவம் பார்க்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள பில்லாலிதொட்டியை சேர்ந்தவர் மணிபாலன் (வயது 30). இவரது மனைவி ராஜலட்சுமி (26). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து மணிபாலன் உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் சிறிது நேரத்தில் கடலூரிலிருந்து வந்த ஆம்புலன்சில் ராஜலட்சுமி, கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
திருவந்திபுரம் அருகே சென்றபோது ராஜலட்சுமிக்கு வலி அதிகமானது. உடனே ஆம்புலன்சில் இருந்த அவசர சிகிச்சை நிபுணர் கிருஷ்ணவேணி ராஜலட்சுமிக்கு பிரசவம் பார்த்தார். அப்போது ஓடும் ஆம்புலன்சிலேயே அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும் சேயும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதேபோல் கடலூர் அடுத்த அணுக்கம் பட்டு பகுதியை சேர்ந்தவர் பகவத். இவரது மனைவி பிரித்தி (21). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணி அளவில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தொண்டமாநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். கடலூர் முதுநகர் அருகே ஆம்புலன்ஸ் வந்தபோது அவருக்கு வலி அதிகமானது. உடனே ஆம்புலன்சில் இருந்த அறுவை சிகிச்சை நிபுணர் கிருஷ்ணவேணி, அவருக்கு பிரசவம் பார்த்தார். இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும் சேயும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே நாளில் 2 பெண்களுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்த அறுவை சிகிச்சை நிபுணர் கிருஷ்ணவேணியை, அந்த பெண்களின் உறவினர்கள் வெகுவாக பாராட்டினர்.
கடலூர் அருகே உள்ள பில்லாலிதொட்டியை சேர்ந்தவர் மணிபாலன் (வயது 30). இவரது மனைவி ராஜலட்சுமி (26). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து மணிபாலன் உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் சிறிது நேரத்தில் கடலூரிலிருந்து வந்த ஆம்புலன்சில் ராஜலட்சுமி, கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
திருவந்திபுரம் அருகே சென்றபோது ராஜலட்சுமிக்கு வலி அதிகமானது. உடனே ஆம்புலன்சில் இருந்த அவசர சிகிச்சை நிபுணர் கிருஷ்ணவேணி ராஜலட்சுமிக்கு பிரசவம் பார்த்தார். அப்போது ஓடும் ஆம்புலன்சிலேயே அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும் சேயும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதேபோல் கடலூர் அடுத்த அணுக்கம் பட்டு பகுதியை சேர்ந்தவர் பகவத். இவரது மனைவி பிரித்தி (21). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணி அளவில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தொண்டமாநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். கடலூர் முதுநகர் அருகே ஆம்புலன்ஸ் வந்தபோது அவருக்கு வலி அதிகமானது. உடனே ஆம்புலன்சில் இருந்த அறுவை சிகிச்சை நிபுணர் கிருஷ்ணவேணி, அவருக்கு பிரசவம் பார்த்தார். இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும் சேயும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே நாளில் 2 பெண்களுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்த அறுவை சிகிச்சை நிபுணர் கிருஷ்ணவேணியை, அந்த பெண்களின் உறவினர்கள் வெகுவாக பாராட்டினர்.